Thursday, September 24, 2009

சச்சின் டெண்டுல்கரின் நத்தைகூடு வீடு - பாந்திரா, மும்பை



வடிவமைப்பாளர் : ஜாவிர் செநோசியின்


இடம் : பாந்திரா, மும்பை


நத்தைகூடு


வெளிச்சம், வண்ணம், வடிவம்


உட்புற தோட்டம்


ஒளி ஊடுருவும் தன்மை


கூடு


பாதை


கவிநயமான இடம்


தொலைக்காட்சி அறை


குளியலறை


சமையலறை


நுண்கலை


படுக்கை அறை

Sunday, September 20, 2009

தூர்தர்ஷன் 50ம் ஆண்டு விழா - நிகழ்ச்சி துளிகளில் சில


18-செப்டெம்பர்-2009 வெள்ளிக்கிழமை அன்று தூர்தர்ஷனின் 50ம் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சி துளிகளில் சில உங்களுக்காக.

ஈரோடு மகேஷ் மற்றும் பாவனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முதலில் தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர்கள், என்ஜினியர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி தூர்தர்ஷனின் சிறப்புகளை பற்றி பேசினார்கள்.தூர்தர்ஷன் "Reach the Unreachable" என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதாக குறிப்பிட்டனர்.

டாக்டர்.பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் தன்னுடைய உரையில், ஆல் இண்டியா ரேடியோ, தூர்தர்ஷன் ஆகியவை தன்னுடைய வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதாக குறிப்பிட்டார். பாலமுரளிகிருஷ்ணாவை உருவாக்கியதை, தூர்தர்ஷனின் 50 ஆண்டு சாதனைகளில் ஒன்றாக குறிப்பிட்டார். கச்சேரியில் பாடுவது வேறு, ஆல் இண்டியா ரேடியோவில் பாடுவது வேறு, தூர்தர்ஷனில் பாடுவது வேறு என்று குறிப்பிட்டார்.


டாக்டர்.பத்மா சுப்ரமணியம் அவர்கள் தூர்தர்ஷனின் கலாச்சார சேவைகளை பாராட்டினார். ஆனால் தூர்தர்ஷன் இந்திய கலாசாரம் சம்பந்தமான பல இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்கு மேல் தான் ஒலிபரப்புவதாக வேதனை தெரிவித்தார். இதனால் பலர், குறிப்பாக சிறு குழந்தைகள் இத்தகைய நல்ல நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்புகளை இழந்து விடுவதாக கூறினார். தன்னுடைய பல நடன நிகழ்ச்சிகளையே இதனால் பார்க்க இயலாமல் போனதாக அவர் கூறினார்.

அதனால் இத்தகைய நிகழ்ச்சிகளை பிரைம் டைமில் ஒலி/ஒளிபரப்ப வேண்டும் என நிகழ்ச்சிக்கு வந்திருந்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் பேசிய எஸ்.வி.சேகர் அவர்கள், தூர்தர்ஷன் நாடக உலகிற்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி பேசினார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை அன்று அரங்கில் (செட்) எடுத்து ஒளிபரப்பப்பட்ட நாடகங்களுக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் இருந்ததாக குறிப்பிட்டார். தற்பொழுது அந்த நாடகங்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகன் பேசும் பொழுது, சிவபெருமானின் திருமணம் கயிலாய மலையில் நடந்த பொழுது நிறைய மக்கள் அங்கு கூடிவிட்டதால், கயிலாய மலை தாழ்ந்துபோனது. தென் பகுதி உயர்ந்து போனது. இதனால் அகத்திய முனிவரை அழைத்து தெற்கே பொதிகை மலைக்கு சென்று நிலத்தை சமன் செய்யுமாறு கூறினார். அகத்திய முனிவரும் பொதிகை மலைக்கு சென்று, அங்கிருந்தாவாறே சிவபெருமானின் திருமணத்தை கண்டு ரசித்தாக குறிப்பிட்டார்.

தூர்தர்ஷனை நாட்டில் 33 கோடி மக்கள் கண்டு ரசிப்பதாக கூறினார். மேலும் அவையில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார்.
பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Mile Sur Mera Tumhara - காணொளி

High Quality



Medium Quality



http://en.wikipedia.org/wiki/Mile_Sur_Mera_Tumhara

தூர்தர்ஷனை பற்றிய மற்ற வலைபூக்கள்
http://ddnational.blogspot.com/search/label/Doordarshan%20Theme%20Songs

தூர்தர்ஷன் 50ம் ஆண்டு விழா பற்றிய மற்ற வலைபூக்கள்
http://etiroli.blogspot.com/2009/09/blog-post_19.html

Thursday, September 17, 2009

தாலசீமியா நோயால் அவதிப்பட்ட அக்காவை தன்னுடைய ஸ்டெம் செல் மூலம் காப்பாற்றிய தம்பி



இன்று தினமலர் நாளிதழில் வெளிவந்த செய்தி.

தாலசீமியா நோய்க்கு ஸ்டெம்செல் சிகிச்சை நாட்டிலேயே முதல் முறையாக சாதனை :

சென்னை:தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட, எட்டு வயது பெண் குழந்தைக்கு, ஸ்டெம் செல் மூலம், இந்தியாவிலேயே முதல் முறையாக, வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்ற கோவையைச் சேர்ந்த பெண் குழந்தை, முழு ஆரோக்கியம் பெற்றுள்ளது.

மிகக் கொடூரமான பரம்பரை நோய்களில் ஒன்று தாலசீமியா. ரத்தக் குறைபாடு நோயான இது, ரத்தத்தில் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ஹீமோகுளோபினை வழக்கத்திற்கு மாறான வடிவத்திற்கு மாற்றும் தன்மை கொண்டது.இக்குறைப்பாட்டால், ரத்த சிவப்பணுக்கள் அதிகளவில் பாழ்பட்டு, தீவிர ரத்த சோகை ஏற்படும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை, ஒவ்வொரு மாதமும் முழுமையாக மாற்ற வேண்டும். இந்நோயை சரியான முறையில் கவனிக்காமல் விட்டால், பெரும் ஆபத்துகளுக்கு வழிவகுக்கும்.


இந்நோய்க்கு ஒரே தீர்வாக, ஸ்டெம் செல் சிகிச்சை கருதப்படுகிறது. அதுவும், கனகச்சிதமாக பொருந்த 25 சதவீதம் மட்டுமே வாய்ப்பு.கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - சரோஜினி தம்பதியின் எட்டு வயது மகள் தாமிரபரணி, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு, பெற்றோர் இவளை அழைத்து வந்தனர். இதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை தான் தீர்வு எனக் கருதிய டாக்டர் ரேவதி ராஜ், ஸ்டெம் செல்லுக்காக, செந்தில்குமார் தம்பதியை, இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தினர்.


மருந்து போல், இன்னொரு குழந்தைக்கு கருத்தரித்தார் சரோஜினி. ஸ்கேன் செய்து பார்த்தபோது, அந்த கருவுக்கும் தாலசீமியா இருப்பது கண்டறியப்பட்டது. டாக்டர்களின் அறிவுரையின்படி, கரு கலைக்கப்பட்டது.


விடாமுயற்சியோடு, மீண்டும் 2008ம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றனர். அதிர்ஷ்டவசமாக, அந்தக் குழந்தைக்கு தாலசீமியா பாதிப்பு இருக்கவில்லை. அக்குழந்தையின் தொப்புள் கொடி ரத்தம் சேகரிக்கப்பட்டு, ஸ்டெம்செல்கள், சென்னையில் உள்ள லைப்செல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டன.


இரண்டு குழந்தைகளின் திசுக்களும் பொருந்துகிறதா, மேற்கொண்டு தாமிரபரணிக்கு சிகிச்சை மேற்கொள்ளலாமா என்பதை உறுதிப்படுத்த, ஹெச்.எல்.ஏ., சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் முதல் படியாக, தாமிரபரணியின் உடலிலுள்ள அனைத்து எலும்பு மஜ்ஜை செல்களும், கீமோதெரபி மூலம் அழிக்கப்பட்டன. பின்னர், தம்பியின் ஸ்டெம் செல்கள் தாமிரபரணியின் உடம்பில் செலுத்தப்பட்டன.


சிகிச்சை முழு பலனளிக்கவே, தாமிரபரணி, தற்போது தாலசீமியா நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார். இனி, அந்தக் குழந்தையும், மற்ற பிஞ்சுகளைப் போலவே துள்ளி விளையாடலாம்.


இது குறித்து, லைப்செல் இன்ட்நேஷனல் நிர்வாக இயக்குனர் மயூர் அபாயா கூறுகையில், ""ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 ஆயிரம் குழந்தைகள் தாலசீமியா பாதிப்புடன் பிறக்கின்றன. உலகளவில் இது 10 சதவீதம். ஸ்டெம்செல் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள இந்த புரட்சிகர மாற்றத்திற்கு, நன்றி சொல்லும் தருணம் இது. தாலசீமியா மற்றும் லூகேமியா போன்ற பல்வேறு உயிர்கொல்லி நோய்களை, தற்போது அறுவை சிகிச்சையின்றி முழுவதுமாக குணப்படுத்தலாம்,'' என்றார்.தாமிரபரணியின் அப்பா செந்தில்குமார் கூறியதாவது:


என் மகள் தாமிரபரணிக்கு ஒன்றரை வயதிலிருந்தே உடல் நிலை பாதிக்கப்பட்டது. தலை முடி கொட்டிவிட்டது; விளையாட முடியாது; நடக்க முடியாது. கடந்த ஆறரை ஆண்டுகளாக, அவளுக்கு மாதம்தோறும் ரத்தம் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, அப்பல்லோ மருத்துவனையில், என் மகள் தாமிரபரணிக்கு ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்டது. தற்போது என் மகள் தாலசீமியா நோயிலிருந்து குணமடைந்துவிட்டாள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5ஆக உள்ளது. என் மகளை அடுத்த ஆண்டு பள்ளியில் சேர்க்க உள்ளேன்.இந்த ஸ்டெம்செல் மாற்று சிகிச்சைக்கு, எட்டு லட்ச ரூபாய் செலவாகும் என்று டாக்டர்கள் சொன்னதும் மற்றவர்களின் உதவியை நாடினேன். தினமலர் நாளிதழில் இலவச விளம்பரமும் செய்யப்பட்டது. இதன் வழியாக பலர் மூலம் நிதி உதவி கிடைத்தது. பல்வேறு நிலைகளில் எனக்கு உதவிய மற்றும் வழிகாட்டிய அனைவருக்கும் என் நண்பர்களுக்கும் இந்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு செந்தில்குமார் உருக்கமாக கூறினார்.

Dinamalar URL : http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17064