Sunday, December 18, 2011

தமிழகத்தின் 234 எம்எல்ஏக்களுக்கு தனி மின்னஞ்சல் முகவரி


T.ராஜேந்தரின் ஒஸ்தி பேட்டி - காணொளி - காணத்தவறாதீர்


Saturday, December 17, 2011

பால் காய்ச்ச தெரியுமா?

நன்றி : தினமலர்
உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன்: பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம். காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்சியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண் தான். பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய் யப்பட்ட பின் தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்து விடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும், உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும். பதப்படுத் தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும். பொதுவாக எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சு ட வைக்க வேண்டாம். ஒருமுறை பாலைக் காய்ச்சியபின், அதை பிரிஜில் வைக் கலாம். காபி, டீ என தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்.

Wednesday, May 18, 2011

ஆண்ட இனம் தளிர்த்து வளர அருள்வாயோ

பொன்னார் மேனியனே!! வெம் புலித்தோல் உடுத்தவனே 
ஆண்ட இனம் தளிர்த்து வளர, செழித்து மலர அருள்வாயோ.

யுத்தத்தின் போது உயரிழந்த அப்பாவி தமிழ் மக்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். 

இப்படிக்கு,
ஈழ தமிழ் மக்கள் துயரத்தில் தவித்த போது உதவி செய்ய இயலாத தென்னிந்திய   தமிழன். 


Saturday, May 14, 2011

வெற்றி பெற்ற அதிமுக கூட்டணி, சவுக்கு (www.savukku.net) இணைய தளத்திற்கு வாழ்த்துக்கள்

ஊழலற்ற நல்லாட்சியை தர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.  வெற்றி பெற்ற அதிமுக கூட்டணிக்கு வாழ்த்துக்கள். 


 சவுக்கு (www.savukku.net) இணைய தளத்தால் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப் பட்ட  ஒரு ஊழல். இதை படித்த பிறகு தான் எனக்கு திமுக அரசின் மீது வெறுப்பு வர ஆரம்பித்தது. 

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=312:2011-01-16-04-08-35&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

அதிமுக அணி தவறு செய்தாலும் அதை சவுக்கு துணிச்சலுடன் சுட்டிக் காட்ட வேண்டும்.


படம் 
நன்றி : தினமலர்




படம் 
நன்றி : Sify


Tuesday, May 10, 2011

அன்புள்ள முதல்வருக்கு, ஆனந்தி எழுதுவது ...

நன்றி : தினமலர் 

10.05.2011 : ஐயா, வணக்கம்! ஆத்தூரை அடுத்துள்ள தலைவாசல் கூகையூர் கிராமத்தைச் சேர்ந்த, 104 வயதான உரைநூல் பேராசிரியர் அடிகளாசிரியருக்கு, மத்திய அரசு தொல்காப்பியர் விருதும், பணமுடிப்பும் அறிவித்து, அதன்படியே கொடுத்தும் விட்டது; சந்தோஷம்! இதுபற்றி தாங்கள் அடைந்த புளகாங்கிதத்தையும், பகிர்ந்து கொண்டீர்கள்; ரொம்ப சந்தோஷம்!
ஆனால், 2000வது ஆண்டில், நீங்கள் அறிவித்த, திருவள்ளுவர் விருது, பணம், இன்னமும் பலருக்கு வரவில்லையே ஐயா! மிக நீண்ட இடைவெளி காரணமாக, இந்த விருது பற்றி கிடைத்தவர்கள் கூட மறந்து இருக்கலாம்; ஆகவே, ஞாபகப்படுத்துகிறேன்.
கன்னியாகுமரியில், 2000வது புத்தாண்டு தொடக்கத்தில், 133 அடி உயர பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை, முதல்வராக இருந்து, திறந்து வைத்தீர்கள். அந்த விழாவில், பள்ளி சிறுவர், சிறுமியர் பலர் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்ததுடன், குறளின் கடைசி வரியை சொல்லி, அக்குறளை சொல்லச் சொன்னால் கூட, முழுக் குறளையும் சொல்லி, பொருளும் கூறினர். 133 அதிகாரத்தில், எந்த இடத்தில், அந்த குறள் இடம் பெறுகிறது என்றும் சொல்லி வியக்க வைத்தனர்.
இப்படி குறளை கரைத்து குடித்த, அந்த சிறுவர், சிறுமியரால், சபை மட்டுமல்ல, நீங்களும் சந்தோஷமடைந்தீர்கள். இந்த குழந்தைகள் படித்து முடிக்கும் வரை, மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்து, கைத்தட்டலையும் அள்ளினீர்கள். அந்த குழந்தைகளும், மாதம் ஆயிரம் ரூபாய் சன்மானம், இந்த மாதம் வரும், அடுத்த மாதம் வரும் என்று காத்திருந்து, காத்திருந்து கிட்டத்தட்ட, 12 வருடமாகிறது; இன்னும் தொகை வந்தபாடில்லை. குழந்தைகள் வளர்ந்தும் விட்டனர்; பலர், இதை மறந்தும் விட்டனர்!
ஆனால், இன்னமும் மறக்காத, அப்பாவி அப்பா ஒருவர், இதை ஞாபகப்படுத்தி, இப்போது அரசுக்கு கடிதம் போட்டார். மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் தருமளவிற்கு அரசிடம் நிதி கொட்டியா கிடக்கிறது? மொத்தத்தில் தொகுப்பூதியமாக ஒரு தொகை, பத்தாயிரமோ அல்லது கொஞ்சம் கூடுதலாகவோ தருவதற்கு ஆலோசனை நடந்துகொண்டு இருக்கிறது. ஆலோசனை முடிந்ததும், சொல்லி அனுப்புகிறோம் என்ற ரீதியில் பதில் அனுப்பியுள்ளார்கள்.
அரசிடம் நிதி கொட்டியா கிடக்கிறது, மாதா, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதற்கு என்று காட்டமாக எழுதிய கடிதத்தின் மை உலர்வதற்கு முன், யாரும் கேட்காமல், எவரும் வற்புறுத்தாமல், இந்திய கிரிக்கெட் அணிக்கு நான்கு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஆயிரத்தை விட, கோடி சிறிதா அல்லது திருக்குறள் ஒப்புவித்த சிறுவர்களை விட, கிரிக்கெட் வீரர்கள் சிரமத்தில் இருக்கின்றனரா? தெரியவில்லை... அனேகமாக, கடிதம் கிடைக்கப்பெற்ற, அந்த அப்பாவி அப்பா, மகனிடம், "இனி, திருக்குறளை விழுந்து, விழுந்து படிப்பே...' என, கேட்டு புளிய விளாறால் விளாசி இருக்கலாம்.
இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 65 லட்சத்திற்கு வாங்குவதற்கு காட்டிய அக்கறையை, ஏன் இதில் காட்டவில்லை என, சம்பந்தபட்ட அதிகாரிகளை, நீங்கள் ஒரு வார்த்தை கேட்கலாமே ஐயா!

மேலும் படிக்க 


Monday, May 9, 2011

லத்திகா 50 வது நாள்

இன்றைய தினத்தந்தி நாளிதழை பார்த்து கொண்டிருந்த எனக்கு,  10 வது பக்கத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்துகொண்டிருந்தது.  

அதிர்ச்சிக்கு காரணம், 10 வது பக்கத்தில் பவர் ஸ்டார் டாக்டர்.S. சீனிவாசன் நடித்த லத்திகா படத்தின் 50 வது நாள் விளம்பரம் வெளியாகி இருந்தது.  அதனோடு அவர் நடித்து கொண்டிருக்கும் மற்ற இரண்டு படங்களின் விளம்பரங்களும் வெளியாகி இருந்தன.

மேலும் விபரங்களுக்கு, 09-May-2011 பெங்களூர் பதிப்பு தினத்தந்தி epaper 10 வது பக்கம் பார்க்கவும் 

http://www.dailythanthi.com/thanthiepaper/firstpage.aspx

படத்தை க்ளிக்கி பெரிதாக்கி பார்த்து அதிர்ச்சி அடையவும். 




பவர் ஸ்டார் பற்றிய மற்ற விவரங்களை கீழ்க்கண்ட சுட்டிகளை சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.

http://iravuvaanam.blogspot.com/2011/03/s.html

http://muthusiva.blogspot.com/2011/05/ksr.html



Sunday, April 3, 2011

உலககோப்பை - தோணியாக நின்று அணியை கரை சேர்த்த கேப்டன் டோனிக்கு சிறப்பு வாழ்த்துக்கள்






நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

2011 ம் ஆண்டுக்கான உலககோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். தோணியாக நின்று அணியை கரை சேர்த்த கேப்டன் டோனிக்கு சிறப்பு வாழ்த்துக்கள். 

Tuesday, March 15, 2011

வடபழனி முருகன் கோவிலில் மயிலாகவும் வேலாகவும் காட்சியளித்த தேனீக்கள்


நன்றி : தினமலர் , தினத்தந்தி (படங்கள்)
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=201948

2011 ம் ஆண்டு, மார்ச் 7,8 தேதிகளில் வடபழனி முருகன் கோவில் கொடி மரத்தில் மயில் வடிவிலும், பின்னர் வேல் வடிவிலும் தேனீக்கள் காட்சி அளித்தன.


Sunday, March 6, 2011

ICC 2011 - உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க விழாவில் நாக்க முக்க பாடல் - காணொளி


Saturday, March 5, 2011

ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு: மனிதநேய அறக்கட்டளை மாணவர்கள் 68 பேர் தேர்ச்சி! பார்வையற்ற மாணவியும் வெற்றி

நன்றி :  http://tamil.webdunia.com/newsworld/career/news/1103/03/1110303069_1.htm


மனிதநேய அறக்கட்டளை  இணையதள முகவரி:
http://www.saidaiduraisamysmanidhaneyam.com/


இந்திய அரசுப் பணி, இந்திய காவல் பணி ஆகியவற்றிற்கு மத்திய அரசுப் பொதுப் பணி ஆணையம் நடத்திய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மைத் தேர்வில் (IAS, IPS Main Exam), சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளையில் பயிற்சி பெற்றுத் தேர்வஎழுதிய 135 மாணவ-மாணவியரில் 68 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விற்குத் தகுதி பெற்றவர்களில் இரண்டு கண் பார்வையையும் இழந்த ஜெ.சுஜிதா என்ற மாணவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை நடத்திவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவச கல்வியகத்தின் மூலமாக, கடந்த 4 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற 87 மாணவ, மாணவியர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, மத்திய அரசுப் பணியிலும், பணி பயிற்சியிலும் உள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வில் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்றுவிக்கப்பட்ட 135 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியிருந்தனர். இத்தேர்வு முடிவு இன்று வெளியாகியுள்ளது. இதில் மனித நேய அறக்கட்டளையின் 68 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மனிதநேய அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, முதன்முறையாக முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதிய உடனேயே நேர்முகத் தேர்விற்கான பயிற்சி நவம்பர் மாதத்திலேயே தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், இதில் ஐ.ஏ.எஸ். மாதிரி நேர்முகத் தேர்வுகள், ஆளுமைக்கான வகுப்புகள், டெல்லிக்கு அழைத்துச் சென்று அங்கு நடத்தப்படும் என்றும், அதற்கான பயணம், தங்குமிட வசதி, உணவு, பயிற்சி அனைத்தும் அறக்கட்டளையின் சார்பாக இலவசமாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் வெளி மாணவ-மாணவியரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், மாணவ, மாணவியர் தக்க சான்றிதழ்களுடன் மையத்தில் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை நாளை (04.03.2011) முதல் பதிவு செய்துக் கொள்ளலாம் என்றும் பயிற்சி மையத்தின் இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்கள் அறிய 044-2435 8373 அல்லது செல்பேசி எண் 98401 06162 தொடர்பு கொள்ளலாம் என்றும் மனிதநேய அறக்கட்டளை அறிவித்துள்ளது. 

Saturday, February 5, 2011

ஸ்பெக்ட்ரம் - வினாடி வினா

படத்தை கிளிக்கி பெரிதாக்கி படிக்கவும். உங்கள் பதில்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். 

Sunday, January 30, 2011

இந்திய ரயில்வேயின் புதிய சிக்னல்கள் - படித்ததில் பிடித்தது

24-JAN-2011 DNA ஆங்கில நாளிதழில் குடியரசு தின விழா அன்றுகாஷ்மீர் மாநிலத்தில் தேசிய கொடி ஏற்ற சென்ற பீ.ஜே.பியினர் குறித்து  வெளியான செய்தி .



நன்றி :
http://epaper.dnaindia.com/dnabangalore/epaperpdf/24012011/23bangalore%20main%20edition-pg1-0.pdf

மேலும் தகவல்களுக்கு :
http://idlyvadai.blogspot.com/2011/01/30-01-11.html



Thursday, January 20, 2011

விரும்பிய செல்பேசி நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளும் வசதி - ரூ.19/-



மேலும்  விளக்கத்திற்கு 
http://idlyvadai.blogspot.com/2011/01/mnp.html