நன்றி : தட்ஸ் தமிழ்
மதுரை: மதுரை கோட்ட ரெயில்வேயில் திங்கட்கிழமை முதல் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரெயில்களுக்கான புதிய ரெயில் எண்கள் நடைமுறைக்கு வருகின்றன.
நாடு முழுவதும் பயணிகளின் வசதிக்காக அதிகளவில் புதிய ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், அனைத்து ரெயில்களுக்கும் எண்கள் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து இந்திய ரெயில்வேயில் உள்ள எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களின் எண்களில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
இந்த எண் மாற்றம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு பழைய எண்களுக்கு முன்னால் 1 சேர்க்கப்படுகிறது. ஆனால் பாசஞ்சர் ரெயிலின் எண்கள் முழுமையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மதுரை வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் புதிய எண்கள் விவரம் பின்வருமாறு:
மதுரை- சென்னை- மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் எண் 12635/12636
மதுரை-சென்னை -மதுரை பாண்டியன் எக்ஸ் பிரஸ் 12637/12638
நெல்லை-சென்னை- நெல்லை எக்ஸ்பிரஸ் 12632/12631
கன்னியாகுமரி- சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 12633/12634
நாகர்கோவில் -சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ் 12667/12668
செங்கோட்டை- சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் 12662/12661
தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் 12694/12693
ராமேசுவரம்-கன்னியா குமரி-ராமேசுவரம் எக்ஸ் பிரஸ் 12789/12790
மதுரை-சென்னை மெயின்லைன் எக்ஸ்பிரஸ் 12793/12794
ராமேசுவரம்-சென்னை மெயின்லைன் எக்ஸ்பிரஸ் 16701/16702
ராமேசுவரம்-சென்னை சேது எக்ஸ்பிரஸ் 16714/16713
திருவனந்தபுரம் -சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 16724/16723
தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் 16731/16732
ராமேசுவரம்-ஓகா எக்ஸ்பிரஸ் 16733/16734
மதுரை கோட்ட ரெயில் வேக்கு உட்பட்ட பாசஞ்சர் ரெயில்களின் புதிய எண் வருமாறு:-
(பழைய எண்கள் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளன)
நெல்லை-மயிலாடுதுறை பாசஞ்சர் 56822 (826 ஏ)
மயிலாடுதுறை-நெல்லை பாசஞ்சர் 56821 (825 ஏ)
மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் 56731(783)
செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் 56736(784)
மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் 56735(785)
செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் 56732(786)
மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் 56733(787)
செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் 56734(788)
மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் 56723(753)
ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் 56726(756)
மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் 56721(751)
ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் 56724(754)
மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் 56725(755)
ராமேசுவரம்-மதுரை பாசஞ்சர் 56722(752)
விழுப்புரம்-மதுரை பாசஞ்சர் 56705(701)
மதுரை-விழுப்புரம் பாசஞ்சர் 56706(702)
மதுரை-திண்டுக்கல் பாசஞ்சர் 56710(716)
திண்டுக்கல்-மதுரை பாசஞ்சர் 56709(715)
திண்டுக்கல்-மதுரை பாசஞ்சர் 56707(711)
மதுரை-திண்டுக்கல் பாசஞ்சர் 56708(712)
மதுரை-கொல்லம் பாசஞ்சர் 56700(727)
கொல்லம்-மதுரை பாசஞ்சர் 56701(728)
திருச்சி-காரைக்குடி பாசஞ்சர் 06839 (839 ஏ)
காரைக்குடி-திருச்சி பாசஞ்சர் 06840 (840 ஏ)
காரைக்குடி- மானாமதுரை பாசஞ்சர் 06837 (841)
மானாமதுரை- காரைக் குடி பாசஞ்சர் 06838 (842).
Sunday, December 19, 2010
Monday, November 22, 2010
நவ்ஸ் என்கிற நவரத்தினத்திற்கு கொடைக்கானலில் ஏற்பட்ட திகில் அனுபவம்
என் பெயர் நவரத்தினம். நண்பர்கள் என்னை நவ்ஸ் என்று அழைப்பார்கள். நான் என் நண்பர்களுடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றேன். அது ஒரு அடை மழை காலம். நல்ல குளிர் காற்று. மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு. பல இடங்களை சுற்றிப்பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. மாலை முடிந்து இருள் லேசாக கவியத் தொடங்கியது.
இறுதியாக தற்கொலை பாறை பகுதிக்கு சென்றோம். அங்கே வேலி போடப்பட்டு இருந்ததினால், அங்கிருந்த சிலரின் எச்சரிக்கையையும் மீறி சிறிது தள்ளி வேலி இடாத பகுதிக்கு சென்றோம்.அவ்விடத்தில் மண் ஈரத்தின் காரணமாக உறுதியற்று இருந்தது. அதனால் மற்றவர்கள் வந்த வழியே திரும்பி செல்ல ஆரம்பித்தனர். ஆனால் நானும் இன்னொரு நண்பனும் முன்னே சென்று பள்ளத்தாக்கை பார்த்துவிட்டு திரும்பலாம் என்று நினைத்தோம். நான் இன்னும் சிறிது முன்னே விளிம்பின் அருகில் சென்றேன். நண்பன் என்னை பின் தொடர்ந்து வந்தான். திடீர் என்று என் காலுக்கு கீழுள்ள மண் சரிந்தது. நான் பள்ளத்தில் சரிய ஆரம்பித்தேன். என் பின்னால் வந்த நண்பன், என் கையை பிடித்து மேலே தூக்க முயற்சி செய்தான். என் கண் முன்னே உலகம் சுற்றியது. மண் சரிவு மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. அவனால் என்னை மேலே தூக்க முடியவில்லை. அவன் நின்ற இடமும் சிறிது சிறிதாக சரியாய் ஆரம்பித்தது. அதனால் அவன் தன் முயற்சியை கைவிட்டு மற்ற நண்பர்களை அழைக்க சென்றான்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் மண் சரிவு அதிகரித்தால் நான் வேகமாக சரிந்தேன். பிடிமானம் எதுவுமில்லை. சரிந்து கொண்டே மண்ணுக்குள் புதைந்தேன். கடைசியில் ஒரு இடத்தில் சரிவு முடிந்தது. என் தலைக்கு மேல் முழுவதும் மண். மூச்சு விட முடியவில்லை. கண்ணை திறந்து பார்த்தால் சுற்றிலும் இருள். கையை கொண்டு முகத்தின் மேலிருந்த மண்ணை அகற்ற முயன்றேன். நான் மண்ணின் ஆழத்தில் இருந்ததால் அகற்ற அகற்ற மண் வந்து கொண்டே இருந்தது. என் பயம் அதிகரித்தது. உடம்பு முழுவதும் வேர்க்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்ற உந்துதலில் என் மேலுள்ள மண்ணை முன்னிலும் வேகமாக அகற்றினேன். இருந்தும் பயனில்லை. கடைசியில் ஒரு வழியாக முகத்தை மூடியுள்ள மண் முழுவதையும் அகற்றிப் பார்த்தால் தலைக்கு மேலே மின்விசிறி சுற்றும் ஓசை கேட்கிறது. அடச்சீ கனவு!!! கனவும் நனவும் சந்தித்த புள்ளியில் அதிர்ச்சியை உணர்ந்தேன். என்னை சுற்றிலும் கருப்பு நிற கம்பளி போர்வை. தூக்கத்தில் குளிருக்கு இதமாக முகம் முழுவதையும் மூடி இருந்த போர்வையை அகற்றத்தான் இத்தனை பாடுபட்டிருக்கிறேன். வெட்கி தலை குனிந்தேன். எப்படியோ மிகப் பெரிய ஆபத்தில்லிருந்து தப்பிய திருப்தியோடும் அதிர்ச்சியோடும் அடுத்த சுற்று தூக்கத்தை ஆரம்பித்தேன். புதிய கனவுக்கு ஆயத்தமானேன்.
இறுதியாக தற்கொலை பாறை பகுதிக்கு சென்றோம். அங்கே வேலி போடப்பட்டு இருந்ததினால், அங்கிருந்த சிலரின் எச்சரிக்கையையும் மீறி சிறிது தள்ளி வேலி இடாத பகுதிக்கு சென்றோம்.அவ்விடத்தில் மண் ஈரத்தின் காரணமாக உறுதியற்று இருந்தது. அதனால் மற்றவர்கள் வந்த வழியே திரும்பி செல்ல ஆரம்பித்தனர். ஆனால் நானும் இன்னொரு நண்பனும் முன்னே சென்று பள்ளத்தாக்கை பார்த்துவிட்டு திரும்பலாம் என்று நினைத்தோம். நான் இன்னும் சிறிது முன்னே விளிம்பின் அருகில் சென்றேன். நண்பன் என்னை பின் தொடர்ந்து வந்தான். திடீர் என்று என் காலுக்கு கீழுள்ள மண் சரிந்தது. நான் பள்ளத்தில் சரிய ஆரம்பித்தேன். என் பின்னால் வந்த நண்பன், என் கையை பிடித்து மேலே தூக்க முயற்சி செய்தான். என் கண் முன்னே உலகம் சுற்றியது. மண் சரிவு மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. அவனால் என்னை மேலே தூக்க முடியவில்லை. அவன் நின்ற இடமும் சிறிது சிறிதாக சரியாய் ஆரம்பித்தது. அதனால் அவன் தன் முயற்சியை கைவிட்டு மற்ற நண்பர்களை அழைக்க சென்றான்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் மண் சரிவு அதிகரித்தால் நான் வேகமாக சரிந்தேன். பிடிமானம் எதுவுமில்லை. சரிந்து கொண்டே மண்ணுக்குள் புதைந்தேன். கடைசியில் ஒரு இடத்தில் சரிவு முடிந்தது. என் தலைக்கு மேல் முழுவதும் மண். மூச்சு விட முடியவில்லை. கண்ணை திறந்து பார்த்தால் சுற்றிலும் இருள். கையை கொண்டு முகத்தின் மேலிருந்த மண்ணை அகற்ற முயன்றேன். நான் மண்ணின் ஆழத்தில் இருந்ததால் அகற்ற அகற்ற மண் வந்து கொண்டே இருந்தது. என் பயம் அதிகரித்தது. உடம்பு முழுவதும் வேர்க்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்ற உந்துதலில் என் மேலுள்ள மண்ணை முன்னிலும் வேகமாக அகற்றினேன். இருந்தும் பயனில்லை. கடைசியில் ஒரு வழியாக முகத்தை மூடியுள்ள மண் முழுவதையும் அகற்றிப் பார்த்தால் தலைக்கு மேலே மின்விசிறி சுற்றும் ஓசை கேட்கிறது. அடச்சீ கனவு!!! கனவும் நனவும் சந்தித்த புள்ளியில் அதிர்ச்சியை உணர்ந்தேன். என்னை சுற்றிலும் கருப்பு நிற கம்பளி போர்வை. தூக்கத்தில் குளிருக்கு இதமாக முகம் முழுவதையும் மூடி இருந்த போர்வையை அகற்றத்தான் இத்தனை பாடுபட்டிருக்கிறேன். வெட்கி தலை குனிந்தேன். எப்படியோ மிகப் பெரிய ஆபத்தில்லிருந்து தப்பிய திருப்தியோடும் அதிர்ச்சியோடும் அடுத்த சுற்று தூக்கத்தை ஆரம்பித்தேன். புதிய கனவுக்கு ஆயத்தமானேன்.
Sunday, October 17, 2010
சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை வாழ்த்துக்கள்
அனைவருக்கும் சரஸ்வதி பூஜை , ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.
சுப்பிரமணியபாரதியார் பாடிய சரஸ்வதி துதி
வெள்ளைத் தாமரைப் பூவிl இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்!
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்!
உள்ளாதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்!
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணைவாசகத் உட் பொருளாவாள்!
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்!
மக்கள்பேசும் மழலையில் உள்ளாள்!
கீதம்பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்!
கோதகன்ற தொழிலுடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்!
இன்பமே வடிவாகிடப்பெற்றாள்!
வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்!
வெஞ்சமர்க்குயிராகிய கொல்லர்,
வித்தை ஓர்ந்திடு சிற்பியர்,தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ்செய்வோர்,
வீரமன்னர் பின்வேதியர் யாரும்
தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறிவாகிய தெய்வம்!
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்!
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்!
உய்வமென்ற கருத்துடையோர்கள்
உயிரினுக் குயிராகிய தெய்வம்!
செய்வமென்றொரு செய்கையெடுப்போர்
செம்மை நாடிப்பணிந்திடுந் தெய்வம்!
கைவருந்தி உழைப்பவர் தெய்வம்!
கவிஞர் தெய்வம்! கடவுளர்தெய்வம்!
செந்தமிழ்மணி நாட்டிடை உள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்தனம் இவட்கே செய்வதென்றால்
வாழி அஃதிங்கெளிதன்று கண்டீர்!
மந்திரத்தை முணுமுணுத்தேட்டை
வரிசையாக அடுக்கி, அதன்மேல்
சந்தனத்தை, மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனையன்றாம்!
வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் எங்கும் பலபல பள்ளி,
தேடு கல்வியிலாதொரு ஊரைத்
தீயினுக்கிரையாக மடுத்தல்
கேடுதீர்க்கும் அமுதம் என் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்!
ஊணர் தேசம் யவனர்தந்தேசம்
உதயஞாயிற்றொளிபெறு நாடு
சேணகன்றதோர் சிற்றடிச்சீனம்
செல்வப்பாரசிகப்பழந்தேசம்
தோணலத்த துருக்கம் மிசிரம்
சூழ்கடற்கப்புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை எல்லாம்
கல்வித்தேவியின் ஒளிமிகுந்தொங்க
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்லபாரத நாட்டிடை வந்தீர்
ஊனம் இன்று பெரிதிழைக்கின்றீர்!
ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்!
மானமற்று விலங்குகள் ஒப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ?
போனதற்கு வருந்துதல் வேண்டா!
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!
இன்னறுங் கனிச்சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண்சுனைகளியற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
நிதி மிகுத்தவர் பொற்குவைதாரீர்!
நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத்தேன் மொழிமாதர்கள் எல்லாம்
வாணிபூசைக் உரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகையானும்
இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்!
Subscribe to:
Posts (Atom)