**********************************************************
தினமலர் செய்தி:
பெங்களூரு - சென்னை இடையே, தூங்கும் வசதி கொண்டு 'ஏசி' பஸ்களை இயக்க, கர்நாடக போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தூங்கும் வசதி கொண்ட 'ஏசி' பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, மகாராஷ்ட்ர மாநிலம் புனேயில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து எட்டு பஸ்கள் வாங்கப்படுகின்றன. ஒவ்வொரு பஸ்சும், 44.50 லட்சம் ரூபாய் மதிப் பில் தயாரிக்கப்படுகிறது. 12 மீட்டர் நீளமுள்ள இப் பஸ்சில், 32 பயணிகள் வசதியாக தூங்க முடியும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது. இதில் முதல் கட்டமாக, இரு பஸ்கள் பெங்க ளூருய - சென்னை இடையே இன்டர்சிட்டி சேவையாக இயக்கப்பட உள்ளது. 'அம்பாரி' என்ற பெயரில் இயக்கப்பட உள்ள இப் பஸ்களில், ஓட்டுனருக்கு சிறப்பு இருக்கைகள், பயணிகள் வசதியாக இயற் கைக் காட்சிகளை காண வசதி, பயணிகளின் பொருட்களை வைக்க வசதியான இடம் என, பல்வேறு சிறப்பம்சங் களை கொண்டு அமைக்கப்படுகிறது. இவ்வகை பஸ்கள், இரண்டாம் கட்டமாக அதிக வருவாய் ஈட்டக் கூடிய பிற மாநில பகுதிகளுக்கும் இயக்கப்படும்.
**********************************************************
ஆனால் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளை பார்த்தல்
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
என்ற பாரதியாரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
Monday, November 16, 2009
Friday, November 13, 2009
தமிழகத்தை சேர்ந்தவரால், மரத்தால் வடிவமைத்து செய்யப்பட்ட கார்

காஞ்சிபுரத்தை சேர்ந்த அப்பர் லட்சுமணன் என்பவர், மரத்தால் செய்யப்பட்ட காரை வடிவமைத்து, அதனை இயக்கிக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த காரின் 85% பகுதி மரத்தால் செய்யப்பட்டதாகும். எஞ்ஜின், கியர், ப்ரேக், ரப்பர் டயர் போன்ற பாகங்கள் தவிர மற்ற பாகங்கள் மரத்தால் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு மாருதி 800 இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சென்னை போரூர் அருகில் வசிது வரும் இவர், மனிதனுக்கும் மரத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையில் 50 வித்தியாசமான பொருட்களை மரத்தால் வடிவமைத்துள்ளார்.
அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தைகளுக்கும் இது போல் செய்திகளை படிக்க சொல்லி, அவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கமளித்து அவர்கள் பல சாதனைகள் படைத்திட தூண்டுகோளாக இருங்கள்.
நன்றி : deccanheraldepaper
November 13 page 14 இதழ்
Labels:
கார்,
மரத்தால் செய்யப்பட்ட கார்
யூத்ஃபுல் விகடன் தளத்தில் எனது பதிவு

திருவிழாக்கால இரயில் பயணசீட்டுகளை http://irctc.co.in இணையதளம் தவிர்த்து மற்ற இணையதளங்கள் வழியாக முன்பதிவு செய்வது எப்படி? (http://blogpaandi.blogspot.com/2009/11/blog-post_08.html) என்ற என்னுடைய பிளாக் பதிவை,
யூத்ஃபுல் விகடன் தளத்தில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் ( http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp) வெளியிட்டமைக்கு விகடனாருக்கும், வருகை தந்தும், பின்னூட்டமிட்டும் ஊக்கமளிக்கும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)