Friday, November 13, 2009

தமிழகத்தை சேர்ந்தவரால், மரத்தால் வடிவமைத்து செய்யப்பட்ட கார்



காஞ்சிபுரத்தை சேர்ந்த அப்பர் லட்சுமணன் என்பவர், மரத்தால் செய்யப்பட்ட காரை வடிவமைத்து, அதனை இயக்கிக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த காரின் 85% பகுதி மரத்தால் செய்யப்பட்டதாகும். எஞ்ஜின், கியர், ப்ரேக், ரப்பர் டயர் போன்ற பாகங்கள் தவிர மற்ற பாகங்கள் மரத்தால் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு மாருதி 800 இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சென்னை போரூர் அருகில் வசிது வரும் இவர், மனிதனுக்கும் மரத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையில் 50 வித்தியாசமான பொருட்களை மரத்தால் வடிவமைத்துள்ளார்.

அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள். குழந்தைகளுக்கும் இது போல் செய்திகளை படிக்க சொல்லி, அவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கமளித்து அவர்கள் பல சாதனைகள் படைத்திட தூண்டுகோளாக இருங்கள்.

நன்றி : deccanheraldepaper
November 13 page 14 இதழ்

3 comments:

vasu balaji said...

தமிழிஷ்ல பப்ளிஷ் பண்ணலையே. நல்ல தகவல்.

blogpaandi said...

// தமிழிஷ்ல பப்ளிஷ் பண்ணலையே. நல்ல தகவல்.
காலையில் கரண்ட் இல்லை. இப்பொழுது தமிழிஷ்ல பப்ளிஷ் செய்துவிட்டேன்.தங்கள் வருகைக்குக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

தங்க முகுந்தன் said...

அருமையான தகவல்! நன்றி!