Showing posts with label தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து. Show all posts
Showing posts with label தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து. Show all posts

Monday, November 16, 2009

பெங்களூரு சென்னை இடையே தூங்கும் வசதி கொண்ட பஸ்கள்

**********************************************************
தினமலர் செய்தி:
பெங்களூரு - சென்னை இடையே, தூங்கும் வசதி கொண்டு 'ஏசி' பஸ்களை இயக்க, கர்நாடக போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தூங்கும் வசதி கொண்ட 'ஏசி' பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காக, மகாராஷ்ட்ர மாநிலம் புனேயில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து எட்டு பஸ்கள் வாங்கப்படுகின்றன. ஒவ்வொரு பஸ்சும், 44.50 லட்சம் ரூபாய் மதிப் பில் தயாரிக்கப்படுகிறது. 12 மீட்டர் நீளமுள்ள இப் பஸ்சில், 32 பயணிகள் வசதியாக தூங்க முடியும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது. இதில் முதல் கட்டமாக, இரு பஸ்கள் பெங்க ளூருய - சென்னை இடையே இன்டர்சிட்டி சேவையாக இயக்கப்பட உள்ளது. 'அம்பாரி' என்ற பெயரில் இயக்கப்பட உள்ள இப் பஸ்களில், ஓட்டுனருக்கு சிறப்பு இருக்கைகள், பயணிகள் வசதியாக இயற் கைக் காட்சிகளை காண வசதி, பயணிகளின் பொருட்களை வைக்க வசதியான இடம் என, பல்வேறு சிறப்பம்சங் களை கொண்டு அமைக்கப்படுகிறது. இவ்வகை பஸ்கள், இரண்டாம் கட்டமாக அதிக வருவாய் ஈட்டக் கூடிய பிற மாநில பகுதிகளுக்கும் இயக்கப்படும்.
**********************************************************

ஆனால் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளை பார்த்தல்

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

என்ற பாரதியாரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

Monday, September 7, 2009

தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்துகளில் மூட்டைப் பூச்சிகள் தொல்லை


தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து - மூட்டை பூச்சி கடி

கண்டக்டரிடம் மூட்டை பூச்சி கடிக்கிறதே என்று கேட்டால், ரூ.1000 ஒதுக்கினால் ரூ.10 க்கு மட்டும் மருந்து அடித்து விட்டு மீதி பணத்தை அதிகாரிகள் சுருட்டி கொள்கின்றனர் என்று காரணம் சொல்கிறார். இப்படி இருந்தால் தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து எப்படி உருப்படும்? கர்நாடக அரசு சொகுசுப் பேருந்தை பார்த்தால் பளபள வென்று ஜொலிக்கிறது.
திருந்துவார்களா தமிழ்நாடு அரசு சொகுசுப் பேருந்து அதிகாரிகள்?

இது குறித்த எனது முந்தைய பதிவை இந்த சுட்டியில் காணலாம்.

http://blogpaandi.blogspot.com/2009/07/blog-post.html

இன்று தினமலரில் வந்த செய்தி
அரசு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் மூட்டைப் பூச்சிகள் * அலர்ஜி ஏற்பட்டதால் போட்டிகளில் தோல்வி
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில், மூட்டைப்பூச்சிகள் ராஜ்யம் நடத்துகின்றன. மதுரையில் நடந்த தேசிய போட்டியில் பங்கேற்க, அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் சென்ற மாணவியர், மூட்டை பூச்சி கடியால் அலர்ஜி ஏற்பட்டு, போட்டியில் தோல்வியடைந்தனர்.தமிழக அரசு, தனியார் சொசுசு பஸ்களுக்கு இணையாக, அரசு போக்குவரத்து கழகம் மூலம், 2007ம் ஆண்டு முதல்,"அலட்ரா டீலக்ஸ்' சொகுசு பஸ் இயக்கி வருகிறது.


தனியார் பஸ்களை விட 50 சதவீதம் குறைந்த கட்டணத்தில், அதே நேரத்தில் தனியார் பஸ்களில் உள்ள "ஏசி'., பேன், "எல்சிடி', "டிவி' உள்ளிட்ட சொசுகு வசதிகள் பயணிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டது."அலட்ரா டீலக்ஸ்' பஸ்கள் விட்ட துவக்க காலத்தில், பஸ்களை போக்குவரத்து கழகம் தினமும் பராமரித்து வந்தது. சட்டசபையில் கூட இம்மாதிரி பிரச்னையை தீர்க்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் கூறப்பட்டது.


தற்போது,போதிய பராமரிப்பு இல்லாமல், பஸ்களில் மூட்டை பூச்சி தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.கடந்த 2ம் தேதி, மதுரை வி.கே.கே., மெட்ரிக் பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையேயான தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.


இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில், ஓசூர் மகரிஷி மெட்ரிக் பள்ளி ப்ளஸ் 1 மாணவி சுமத்ரா (16), கீர்த்திப்ரியா (16) ஆகியோர் சூப்பர் சீனியர் பிரிவிலும், டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி கீர்த்திகா ராஜன், சப்-ஜுனியர் பிரிவிலும், விளையாட சென்றனர். செப்.,1ம் தேதி இரவு, ஓசூரில் இருந்து மதுரை சென்ற அரசு "அலட்ரா டீலக்ஸ்' சொகுசு பஸ்சில் உறவினர்களுடன் சென்றனர்.


பஸ்சில் பயணம் செய்த சிறிது நேரத்தில், சீட்டுகளுக்கு அடியில் இருந்த மூட்டை பூச்சிகள், மாணவியர் உள்ளிட்ட பயணிகளை பதம் பார்த்தது.இதனால், இரவு முழுவதும் மாணவியர் தூங்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மறுநாள் காலை மதுரை சென்றதும், மாணவியர் சுமத்ரா, கீர்த்தி ப்ரியா ஆகியோருக்கு மூட்டை பூச்சி கடியால் அலர்ஜி ஏற்பட்டது. தூக்கமின்மையால் அவர்களுக்கு பெரும் களைப்பும் உண்டாகி விட்டது.


"தேசிய போட்டியில் வெற்றி பெற வேண்டும்' என்ற கனவுடன் மதுரை சென்ற மாணவியர், உடல் நிலை ஒத்துழைக்காததால், தோல்வி அடைந்தனர். மாணவி கிருத்திகா ராஜன் மட்டும் வெற்றி பெற்றார். பாதிக்கப்பட்ட மாணவி சுமத்ரா கூறியதாவது:சிறு வயதில் இருந்து மாவட்ட, மாநில மற்றும் தேசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று உள்ளேன். கடந்த முறை இதே போட்டியில் சீனியர் பிரிவில் விளையாட சென்ற நான், தங்கப்பதக்கம் பெற்றேன்.


இந்தமுறையும் நிச்சயம் தங்கப்பதக்கம் பெறுவேன் என்று நம்பினேன். அதற்காக தீவிர பயிற்சி எடுத்தேன். "அல்ட்ரா டீலக்ஸ்' பஸ்சில் மூட்டை பூச்சி கடியால் கை, கழுத்து பகுதியில் அரிப்பு ஏற்பட்டு, என்னால் போட்டியில் விளையாட முடியவில்லை.தலை சுற்றியபடி வந்ததால், போட்டியில் தோல்வி அடைந்தேன். அரசு பஸ்சில் சென்றதால், பலநாள் பயிற்சி வீணாகி விட்டது.இவ்வாறுக மாணவி சுமத்ரா தெரிவித்தார்.