
முதல் பாகமான என் இனிய இயந்திராவில் சர்வாதிகாரி ஜீவா ஆளும் நாட்டின் தேச பக்தி கீதத்தை பற்றி இவ்வாறு குறிப்பிட்டு இருப்பார்.
தந்தையின் மணிக்கொடி
பாரீர்..... அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் ஜீவா வாழ்கவேன்றே.....
பள்ளியில் நாம் பாடிய அசல் தேசியக் கோடி பாடல் இதோ
தாயின் மணிக்கொடி
பாரீர்...... அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் மூவர்ணங்களோடு......
மீண்டும் ஜீனோ நாவலைப் பற்றி சுஜாதா அவர்களின் கருத்து :
இந்தக் கதையில் ஜீனோ என்ற இயந்திர நாய் மனித சமுதாயம் சுபிட்சமடைய ராணி நிலாவுக்கு உதவுகிறது. அதற்காக அது செய்யும் சாகசங்கள் மிக அற்புதம்.
மனிதர்களைவிட இயந்திரங்கள் உண்மையாய்ப் பாசாங்கு செய்யாமல் இந்த தேசத்தைக் காக்க முடியும். ஆள்வோர் தன் கடமைகளைச் சரியாகச் செய்யாமல் சுயநல வேட்கை கொண்டு நாட்டை வேட்டைக் காடாக்கி வரும் இந்த நாளில்...? அதற்கு மாற்று என்ன? இப்படி யோசித்ததின் பலனே இந்தப் புதிய சிந்தனை.
மீண்டும் ஜீனோ சுஜாதா - MEENDUM JEENO
இந்த நாவலை இணையத்தில் படிக்க அல்லது தரவிறக்கம் செய்து படிக்க கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கவும்.
http://www.scribd.com/doc/6365090/-Meendum-Jeeno-sujatha