Monday, October 26, 2009

ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம் : ஜப்பான் நிபுணர் தகவல்

சென்னை : ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா தெரிவித்துள்ளார்.இந்திய - ஜப்பான் கூட்டு முயற்சியில் இயங்கும் 'நிச்சி இன்' புத்துயிர் மருத்துவ மையம் சார்பில், சர்வதேச ஸ்டெம் செல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பிரபல ஸ்டெம் செல் விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளருமான யுகியோ நாக்கமுரா, ஜப்பான் விஞ்ஞானிகளின் ஸ்டெம்செல் மூலம், 'அப்லஸ்ட்டிக் அனிமியா' மற்றும் 'தலசிமியா' போன்ற ரத்தப் புற்றுநோய்களுக்கு ஸ்டெம்செல் மூலம் குணப்படுத்தும் முறையை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், 'இந்திய - ஜப்பான் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போதைய கண்டுபிடிப்பான, '(இஈ34+)செல்ஸ்' மற்றும் 'போன் மாரோ'விலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல் முறை ரத்த புற்றுநோயாளிகளுக்கு நல்ல மாற்றாக அமையும். இந்த கண்டுபிடிப்பில் மிருக கொழுப்பு கலப்படம் ஏதும் இல்லை' என்றார்.

நன்றி : தினமலர்

No comments: