Sunday, September 20, 2009

தூர்தர்ஷன் 50ம் ஆண்டு விழா - நிகழ்ச்சி துளிகளில் சில


18-செப்டெம்பர்-2009 வெள்ளிக்கிழமை அன்று தூர்தர்ஷனின் 50ம் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சி துளிகளில் சில உங்களுக்காக.

ஈரோடு மகேஷ் மற்றும் பாவனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முதலில் தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர்கள், என்ஜினியர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி தூர்தர்ஷனின் சிறப்புகளை பற்றி பேசினார்கள்.தூர்தர்ஷன் "Reach the Unreachable" என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதாக குறிப்பிட்டனர்.

டாக்டர்.பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் தன்னுடைய உரையில், ஆல் இண்டியா ரேடியோ, தூர்தர்ஷன் ஆகியவை தன்னுடைய வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதாக குறிப்பிட்டார். பாலமுரளிகிருஷ்ணாவை உருவாக்கியதை, தூர்தர்ஷனின் 50 ஆண்டு சாதனைகளில் ஒன்றாக குறிப்பிட்டார். கச்சேரியில் பாடுவது வேறு, ஆல் இண்டியா ரேடியோவில் பாடுவது வேறு, தூர்தர்ஷனில் பாடுவது வேறு என்று குறிப்பிட்டார்.


டாக்டர்.பத்மா சுப்ரமணியம் அவர்கள் தூர்தர்ஷனின் கலாச்சார சேவைகளை பாராட்டினார். ஆனால் தூர்தர்ஷன் இந்திய கலாசாரம் சம்பந்தமான பல இசை, நாட்டிய நிகழ்ச்சிகளை இரவு 11 மணிக்கு மேல் தான் ஒலிபரப்புவதாக வேதனை தெரிவித்தார். இதனால் பலர், குறிப்பாக சிறு குழந்தைகள் இத்தகைய நல்ல நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்புகளை இழந்து விடுவதாக கூறினார். தன்னுடைய பல நடன நிகழ்ச்சிகளையே இதனால் பார்க்க இயலாமல் போனதாக அவர் கூறினார்.

அதனால் இத்தகைய நிகழ்ச்சிகளை பிரைம் டைமில் ஒலி/ஒளிபரப்ப வேண்டும் என நிகழ்ச்சிக்கு வந்திருந்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் பேசிய எஸ்.வி.சேகர் அவர்கள், தூர்தர்ஷன் நாடக உலகிற்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி பேசினார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை அன்று அரங்கில் (செட்) எடுத்து ஒளிபரப்பப்பட்ட நாடகங்களுக்கு மிகப் பெரிய ரசிகர் வட்டம் இருந்ததாக குறிப்பிட்டார். தற்பொழுது அந்த நாடகங்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் திரு.ஜெகத்ரட்சகன் பேசும் பொழுது, சிவபெருமானின் திருமணம் கயிலாய மலையில் நடந்த பொழுது நிறைய மக்கள் அங்கு கூடிவிட்டதால், கயிலாய மலை தாழ்ந்துபோனது. தென் பகுதி உயர்ந்து போனது. இதனால் அகத்திய முனிவரை அழைத்து தெற்கே பொதிகை மலைக்கு சென்று நிலத்தை சமன் செய்யுமாறு கூறினார். அகத்திய முனிவரும் பொதிகை மலைக்கு சென்று, அங்கிருந்தாவாறே சிவபெருமானின் திருமணத்தை கண்டு ரசித்தாக குறிப்பிட்டார்.

தூர்தர்ஷனை நாட்டில் 33 கோடி மக்கள் கண்டு ரசிப்பதாக கூறினார். மேலும் அவையில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார்.
பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Mile Sur Mera Tumhara - காணொளி

High Quality



Medium Quality



http://en.wikipedia.org/wiki/Mile_Sur_Mera_Tumhara

தூர்தர்ஷனை பற்றிய மற்ற வலைபூக்கள்
http://ddnational.blogspot.com/search/label/Doordarshan%20Theme%20Songs

தூர்தர்ஷன் 50ம் ஆண்டு விழா பற்றிய மற்ற வலைபூக்கள்
http://etiroli.blogspot.com/2009/09/blog-post_19.html

4 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

vasu balaji said...

நல்ல தொகுப்பு. நன்றிங்க.

Useful Shopping Tips said...

மிக நன்று

நிஜாம் கான் said...

நல்ல பதிவு பாண்டி. 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாடிய‌ தூர்தர்ஷனுக்கு நம் வாழ்த்துக்கள்