Monday, August 24, 2009

நெல்லை எக்ஸ்பிரஸின் இணைப்பு பாசஞ்சர் ரயில் தொடக்கம்

திருச்செந்தூர்: இன்று முதல் புதிதாக நெல்லை எக்ஸ்பிரசுக்கான இணைப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த பயணிகள் ரயில் நெல்லையிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 11.15க்கு திருச்செந்தூர் செல்லும். இதேபோல திருச்செந்தூரில் மாலை 4.10 மணிக்கு புறப்படும் மற்றோரு பயணிகள் ரயில் மாலை 5.55 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும்.

இதுகுறித்து நெல்லை ரயில் நிலைய மேலாளர் கூறுகையில், நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு காலை 7 மணி, முற்பகல் 11.25, மாலை 6.15 மணிக்கு பயணிகள் ரயில் திருச்செந்தூருக்கு செல்கிறது.

இதேபோல திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு 3 ரயில்கள் இயக்கப்படுகிறது.

இன்று முதல் புதிதாக நெல்லை எக்ஸ்பிரசுக்கான இணைப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த பயணிகள் ரயில் நெல்லையிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 11.15க்கு திருச்செந்தூர் செல்லும்.

இதேபோல திருச்செந்தூரில் மாலை 4.10 மணிக்கு புறப்படும் மற்றோரு ரயில் மாலை 5.55 மணிக்கு வந்து சேரும்.

இன்று மாலை திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் தூத்துக்குடி எம்.பி. ஜெயதுரை எம்பி கொடியசைத்து ரயில்வே சேவையை துவக்கி வைக்கிறார் என்றார்.
Source: www.thatstamil.com
Thanks: Thatstamil

3 comments:

துபாய் ராஜா said...

நல்லதொரு தகவல்.நன்றி.

குப்பன்.யாஹூ said...

useful post.

blogpaandi said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
-பிளாக் பாண்டி